பரீட்சை கண்காணிப்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்

2021 (2022) கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் இணையம் மூலம் கோரியுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இறுதி திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி இணையம் மூலமாக அணுகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாகவும், ‘DoE’ மொபைல் செயலி மூலமாகவும் அல்லது https://onlineexams.gov.lk/eic (https://onlineexams.gov.lk/eic) என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை கண்காணிப்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version