பொரளை கைக்குண்டு விவகாரம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று முன்தினம் (11/01) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 13 வயது சிறுவனின் உதவியுடன் கைக்குண்டுகள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், குறித்த சிறுவன் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவான் வாக்குமூலம் பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொரளை கைக்குண்டு விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version