மகளிர் அணியில் கொவிட் 19 தொற்று உறுதி

ICC உலக கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்காக சிம்பாப்வே சென்றிருந்த மகளிர் கிரிக்கெட் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒமிக்ரொன் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு அடையாளம் காணப்பட்ட நாடுகளில் ஒன்றாக சிம்பாப்வேவும் காணப்படுவதுடன் அந்த நாட்டிலுள்ளவர்கள் இலங்கைக்கு வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த சுற்றுப் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சிலர் டுபாயினூடாக மீண்டும் நாடு திரும்பவுள்ளதுடன் தொற்றுக்குள்ளான 7 பேரையும் அந்த நாட்டிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீண்டும் நாடு திரும்பவுள்ள வீராங்கனைகள் இங்கு வந்ததும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகளிர் அணியில்  கொவிட் 19 தொற்று உறுதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version