இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளடங்கிய தொடர் 1-1 என்ற சமநிலையில் காணப்படுவதனால் இன்றைய போட்டி முக்கியமானதாக அமையவுள்ளது. கடந்த போட்டியில் இந்தியா அணி மோசமான தோல்வியினை சந்தித்துள்ள நிலையில் அவர்கள் மீதான பார்வையே இன்றைய போட்டியில் அதிகம் காணப்படுகிறது. இந்தியா அணியின் துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட பிரயோகங்கள் கடந்த போட்டியில் மோசமாக அமைந்தது இத்தியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஓரிரு மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது துடுப்பாட்ட வரிசையில் இருக்காது என்றே நம்பப்படுகிறது. சகலதுறை வீரருக்கான இடத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு அஷ்வின் விளையாடும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா நீக்க்கப்பட்டு சார்தூள் தாகூர் விளையாடும் வாய்ப்புகளுமுள்ளன. எப்பிடி இருப்பினும் மாற்றங்கள் தொடர்பில் இந்தியா அணி எந்த அறிவிப்புகளையும் இதுவரை விடவில்லை. இங்கிலாந்து அணி ஒரு மாற்றம் செய்துள்ளது. குழைந்தை கிடைத்துள்ளமையினால் ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகியுள்ளார். ஜொனி பாஸ்டோவ் விக்கெட் காப்பாளராக கடமையாற்ற உள்ளார். ஒல்லி பொப் அணியில் இணையவுள்ளார்.
த ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் முடிவை தரக்கூடியவை. அந்த வகையில் இன்று ஆர்மபமாகும் போட்டி முடிவினை தரும் என்பதனால் முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியா அணி 1971 ஆம் ஆண்டின் பின்னர் வெற்றிகளை இந்த மைதானத்தில் பெற்வில்லை என்பதும், இங்கிலாந்து இறுதியாக தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளை வெற்றி பெற்றுள்ளது என்பதும் முக்கியமானது. இந்த போட்டி விறு விறுப்பாக இருக்குமென அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை, தென்னாபிரிக்க தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் இன்று(02.09.2021) கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.…

பதுக்கிய 83,000 KG சீனி வெளிவந்தது. கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகம்

மேல்மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் கிலோ கிராம் சீனி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொவிட் காலப்பகுதியான நெருக்கடியான இந்தக் காலப்பகுதியில் மக்கள்…

பொறுப்பற்ற சுகாதார ஊழியர்கள்.

கொவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தி நிறைவடைந்ததை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் சுகாதார துறையினை சேர்ந்தவர்களும், அவர்களது உதவியாளர்களும் புகைப்படம் எடுத்து கொண்டாடியதாக…

கொவிட் தொற்று

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம். ●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்…

ஓட்ஸிசன் இன்றி இறப்பதற்கு இடமளிக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓட்ஸிசன் இன்றி எந்த ஒரு நபரும் இறப்பதற்கு இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா…

கொரோனா தடுப்பூசிகளை கையாள்வது சுகாதார துறையல்ல.

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை மாவாட்ட ரீதியில் பிரித்து வழங்குவது ஜனாதிபதி தலமையிலான கொவிட் செயலணியே தவிர சுகாதார துறையல்ல என வவுனியா…

நேர்த்தியான வேகப்புயலின் புயல் ஓய்ந்தது.

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைய்ன் தான் சகலவித கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு…

SLRC வவுனியா குற்றச்சாட்டு அர்தமற்றது – நகரசபை தலைவர்

வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் பொருளாளர் தனபாலசிங்கம் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கை பிழையானது. அர்தமற்றது என வவுனியா நகரசபை தலைவர் கெளதமன்…

ஆசிரியர்களின் சமபள பிரச்சினைக்கு முடிவு

ஆசியர்கள் சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வருடத்துக்கான பாதீட்டில் அதிபர், ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளடக்கப்படும் என அமைச்சரவை…