மக்கள் பார்வைக்காக புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நடைப்பாதையில் அலை மோதும் மக்கள் கூட்டத்தினால், ‘துறைமுக நகர கொத்தணி’…
Popular
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (18/01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட…
கம்பன் கலை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
அகில இலங்கை கம்பன் கழகம், இளையவர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி கல்லூரி ஒன்றைஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இன்று (17/01) கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் இடம்பெற்றது. அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாரதி ஜெயராஜின் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்றஉறுப்பினர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எம்.பி மற்றும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை கம்பன் கழகம்சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நல்ல இலக்கியங்களை படைக்க வேண்டுமென எனதனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அவரை தொடர்ந்து, உடலையும், உணர்வையும், மனதையும் பயிற்றுவித்து நல்ல இளைஞர்களை உருவாக்கும்நாற்று மேடையாக இருக்க வேண்டுமென தனது வாழ்த்தை மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தார். அத்தோடு இலங்கையின் சகல மாவட்ட இளைஞர்களையும் உள்வாங்கி பயிற்சிகளை வழங்குவது மிகச்சிறந்தவிடயம். அத்தோடு அவர்களுக்கு இரு மொழி அறிவு, நேர்மை, அர்பணிப்பு, துணிச்சில் போன்ற நல்லதலைவருக்கான பண்புகளையும் போதித்து இலங்கையின் சிறந்த தலைவர்களாக இந்த கலைக்கல்லூரிஉருவாக்க வேண்டுமென்ற அறிவுரையை வழங்கியிருந்தார். மேலும், செல்வம் அடைக்கலநாதன் MP, வீரம் விளைந்த மண்ணில் ஆரம்பிக்கப்படும், இளையவர்களுக்கானஇந்த கல்லூரி நல்ல முறையில் உருவாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரின் MP, எம்.பி, காலத்தின் தேவை, காலம் தாமதித்துஆரம்பித்தாலும், அது போரின் பின்னரான தேவையாக இருந்தது. அதனை பேசிக் கொண்டிருந்தோம். ஆனால்தற்போது இது ஆரம்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
அரச நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
நாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு…
உணவுக்காக மாத்திரம் ரூ.9 கோடி செலவு
கடந்த 2020 ஆண்டில் மாத்திரம் உணவுக்கு 9 கோடி ரூபா செலவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்துக்கு வரும் அமைச்சர்கள்,…
‘எரிபொருள் வழங்க முடியாது’
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை…
நுவெரெலியா பொங்கல் விழா
நுவரெலியா – சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டதுடன்தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்பழனி திகாம்பரம் எம்.பி, மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மற்றும்பாராளுமன்ற உறுப்பினர் உதயக்குமார், ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஹேசவிதான ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் “நான்காவது கட்டமாக 10,000 வீடுகள் கட்டும் திட்டம்மலையகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படுமென இந்திய உயர்ஸதானிகர் தெரிவித்தார். இந்தியாவுக்கும்இலங்கைக்குமான தொப்புள் கொடி உறவு தொடருமெனவும், மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழிமக்களை பாரத தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள் எனவும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்தும் இந்தியாபைகொடுக்குமென மேலும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து தான் ஜனாதிபதி பொறுப்பையேற்றதும் தேயிலைதொழிற்சலைகளுக்கான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படும் எனவும் அதன் மூலம் சகல தொழிலாளர்பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எதிர்கட்சி தலைவர, பாராளுமன்ன உறுப்பினர் சஜித் பிரேமதாசதனதுரையில் தெரிவித்தார். தான் இனவாத்த்துக்கோ, அடிப்படைவாத்த்துக்கோ பயந்தவனில்லை. தற்போதைய அரசினால்மேற்கொள்ளப்படும் அவ்வாறன நடவடிக்கைகளை முறியடித்து சகல இன மக்களும் இணைந்து அமைதியாக சந்தோசமாக இந்த நாட்டில் வாழ, நாட்டை பாதுகாக்க வழிசெய்து கொடுப்பேன் என தெரிவித்த சஜித் பிரேமதாச மலையகத்திலும், இலங்கை பூராகவும் தொழில்நுட்பகல்வியினை அனைத்து மாணவர்களும் கற்பதற்கான திட்டங்கள் மற்றும் சுகாதார தேவைகளுக்கானஅத்தியாவசிய பொருட்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளோம். எதிர்கட்சியாக இருந்து கொண்டே செய்யஆரம்பித்துவிட்டோம் எனவும் தெரிவித்த அவர், ஆட்சிக்கு வந்ததும் இன்னமும் பல திட்டங்களைசெயற்படுத்துவோம் எனவும் தனதுரையில் கூறினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடனில்லாமல் நன்கொடையாக வீடுகள் அமைக்க தமது ஆட்சியின் போது நிதியை வழங்கியதாகவும், அதனை மீண்டும் ஆட்சிக்கும் வந்ததும் செய்வோம் எனவும் எதிர்கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தனது உரையில் தெரிவித்தார். நான்காவது நாளான இன்றைய காணும் பொங்கலில் இந்திய மலையக மக்களை காண்பதற்காக வருகை தந்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் நுவரெலியாவுக்கு வந்து மக்களைபார்வையிட்டு சென்றுள்ளனர். போகி பண்டிகையில் பழையனவற்றை தூக்கியெறிவது போன்று இந்த அரசையும்தூக்கியெறியவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது உரையில் தெரிவித்தார். “இந்திய உயர் ஸதானிகர் கோபால் பாக்லே…
பசுபிக் கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை
பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. தெற்கு பசுபிக் கடலில் பதிவான…
“13 ஐ தீண்டவே மாட்டோம்” என்பவர்கள் மாற்று போராட்ட பயணத்தை முன்னெடுக்க வேண்டும் – மனோ
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆம் திருத்த சட்டம்வேண்டாம் என்ற கோரிக்கையினை முன்வைத்து இம்மாத இறுதியில் அரசியல் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. “13 மற்றும் மாகாண சபைகள் வேண்டாம்” என்றால் மாற்று பயணம் இருக்க வேண்டும். உண்மையில் தமிழ்க தேசிய மக்கள் முன்னணியின் கட்சி நிலைப்பாட்டின்படி இது மிக சரியான முடிவாகும் என இந்தபோராட்டம் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்தெரிவித்துள்ளார். புலிகள் 13ஐ நிராகரித்தார்கள். ஆனால் நிராகரித்து விட்டு, “எல்லாம் தானாக மாறும்” என அவர்கள்வாளாவிருக்க இல்லை. இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள மனோ MP கீழ்கண்டவாறுதெரிவித்துள்ளார். புலிகளது வழிமுறையை ஏற்காதவர்கள்கூட, மாற்று பயண திட்டத்தை முன்னெடுத்த அவர்களது அரசியல்நேர்மையை மதித்தார்கள். 2005 முதல் 2009 வரை இறுதி யுத்த காலத்தில் கொழும்பில் வந்து அடைக்கலம் புகுந்த வட-கிழக்கு புலத்துஉடன்பிறப்புகளுக்காக நானும், எனது கட்சியும், நான் உருவாக்கிய “மக்கள் கண்காணிப்பு குழு” என்ற மனிதஉரிமை இயக்கமும் தெருப்போராட்டங்களை, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தி போராடினோம். …
கனேடிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா இலங்கையிலுள்ள அந்நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை…