மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகரான கவுண்டமணி,’பழனிச்சாமி வாத்தியார்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’படத்தில் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கவுண்டமணி நடிப்பில் களம் இறங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் கவுண்டமணி நடிக்கவுள்ள திரைப்படம் ‘பழனிச்சாமி வாத்தியார்’. இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று இடம்பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி!
மீண்டும் கதாநாயகனாகும் கவுண்டமணி!

Social Share

Leave a Reply