வடக்கு, கிழக்கிலும் புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் – மதத் தலைவர்கள் வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கிலும் புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் - மதத் தலைவர்கள் வலியுறுத்தல்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடுகிறது.

இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் யாழ் ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து
தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

தெற்கு போன்று வடக்கு, கிழக்கிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் என மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply