பிலியந்தலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் இன்று (29/12) காலை சொகுசு ரக ஜீப் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரக ஜீப் வண்டி ஒன்று, வீதியை விட்டு விலகி கொங்கிரீட் சுவரில் மோதுண்டு பின்னர் வீதியில் நடந்து சென்றவர் மீதும் மோதியுள்ளது.

இதில் பொரலஸ்கமுவ – வெரஹெர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் பிலியந்தலையில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜீப் வண்டியை ஓட்டிச் சென்ற குறித்த நபர், நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் என்பதுடன், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Social Share

Leave a Reply