வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 50 க்கும் அதிகமான சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, மேலும் 15 கொரோனா மரணங்கள் நேற்று (23/02) அறிவிக்கப்பட்டிருந்தன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர் எண்ணிக்கை உயர்வு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version