தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட் சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருட்களின் விலைகள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக சுட்டிக் காட்டியுள்ள அவர், 2022ஆம் ஆண்டில் இதுவரையான 25 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 704 கோடி ரூபாவை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் அச்சிடப்பட்ட முழுத்தொகை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version