தொடரும் கொரோனோ கட்டுப்பாடுகள்

கடந்த மாதம் நடைமுறையிலிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் இந்த மாதமும் தொடருமென சுகாதா சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பொது நிகழ்வுகள் நடத்துவதாக இருந்தால் சுகாதர சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடரும் அதேவேளை, திருமண நிகழ்வுகள் அடங்கலான சகல நிகழ்வுகளுக்கும், 50 சதவீதமானவர்களுடன் நடாத்த முடியுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருவதனால், இறுக்கமாக சுகாதர நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதர சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் மக்களை கேட்டுக்கொண்டுள்ள அதேவேளை, பூஸ்டர் தடுப்பூசிகளையும் விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடரும் கொரோனோ கட்டுப்பாடுகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version