இராமேஸ்வரத்துக்கு அகதிகளாக சென்ற குடும்பம்

இந்தியா, தமிழகம் இராமேஸ்வரத்துக்கு இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று அகதிகளாக படகில் சென்றுள்ளார். கணவன், மனைவி மற்றும் 04 மாத ஆண் கைக்குழந்தை, மற்றும் இன்னொரு பெண் அவருடைய 12 வயது மற்றும் 06 வயது குழந்தைகள் அடங்கலாக மொத்தமாக 06 பேர் இவ்வாறு அங்கு சென்றுள்ளனர்.

படகு ஓட்டும் ஒருவரிடம் 50,000 ரூபா பணம் வழங்கி இவ்வாறு தமிழகத்துக்கு சென்றுள்ளதாக கடலோர காவற் துறையில் அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் இவ்வாறு இந்தியா செல்வதற்கு பலர் காத்திருப்பதாகவும் மேலும் அவர்கள் இந்திய கடல் பாதுகாப்பு பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர்.

கடலோர காவல் துறையினர் குறித்த நபர்களுக்கு உணவினை வழங்கி பின்னர் பொலிஸாருக்கு கையளித்துள்ளனர். பொலிஸார் அவர்களை மண்டபம் முகாமில் கையளித்துள்ளனர்.

இலங்கையில் தமக்கு உணவு வாங்குவதற்கு கஷ்டப்படுவதனால் இந்தியாவுக்கு வந்தாக அவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இராமேஸ்வரத்துக்கு அகதிகளாக சென்ற குடும்பம்
Photo Credit – Times Of India

Social Share

Leave a Reply