ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வி மீடியாவுக்கு இதனை உறுதி செய்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய இரண்டு பங்காளி கட்சிகளுமான தமிழரசுக் கட்சி, மற்றும் தமிழீழ விடுதலை கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.