JVP கூட்டத்தில் மக்களுக்குள் மனோ

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் இன்று நடாத்தப்பட்ட பேரணியினை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மக்களோடு மக்களாக கலந்து கொண்டிருந்தார்.

தேசிய மக்கள் சகதியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கே உரையாற்றும் போது நுகேகொட வீதியில் அவரது பேச்சை மக்களோடு வீதியில் நின்று செவிசாய்த்துக் கொண்டிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன். அவரோடு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் மு.பரணிதரனும் இந்த கூட்டத்துக்கு சென்றிருந்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தேசிய மக்கள் சக்தி இந்த மக்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

JVP கூட்டத்தில் மக்களுக்குள் மனோ
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version