நள்ளிரவிலும் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை

கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் நள்ளிரவு நேரத்திலும் மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவி விலகும் அறிவிப்பை வெளியிடும் வரை தாம் அந்த இடத்திலிருந்து விலகி செல்லப்போவதில்லை என்ற கோஷங்களோடு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மட்டுமல்ல இன்றைய தினம் இலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி செயலகம், பிரதமரின் தங்காலை வீடு, அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் என பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய அரசாங்கம் விலகி செல்ல வேண்டுமென்ற கோஷங்களோடு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவிலும் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version