நேற்று , 17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் நேற்று (18.04)) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதனடிப்படையிலான முழுமையான அமைச்சராக்கள் விபரம்
- திரு. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.
- திரு. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு.
- திரு. ரமேஷ் பத்திரன – கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்.
- திரு. பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா.
- திரு.திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்.
- திரு கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்.
- திரு.விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சு.
- திரு.ஜானக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம்.
- திரு.ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி.
- திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்.
- திரு. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு.
- திரு. காஞ்சன விஜேசேகர – வலுசக்தி, மின்சக்தி.
- திரு. தேனுக விதானகமகே – இளைஞர் மற்றும் விளையாட்டு.
- திரு. நாலக கொடஹேவா – வெகுசன ஊடக அமைச்சு.
- திரு. சன்ன ஜெயசுமன – சுகாதாரம்.
- திரு. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்.
- திரு. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை.
ஏற்கனவே பதவி வகித்த
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்
நிதி அமைச்சர் அலி சப்ரி
ஆகியோரின் பதவிகள் தொடர்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொண்டுள்ள அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.