இன்று பிற்பகல் ஆரம்பித்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களது ஆதரவோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலக கோரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய அரசாங்கம் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குமென்றால் தான் புதிய அரசாங்கத்துக்கு ஆசியினை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் பிரதமர் தரப்பிலிருந்து இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை.
மேலதிக விபரங்கள் விரைவில்
