முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பதவியிலிருத்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
தனது பதவி விலகலை ஊடகங்கள் மூலம் அறிவிக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவதில் அதிக ஆர்வமில்லையெனவும், இருந்தாலும் தான் அரசியலில் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை டுபாயினூடாக அமெரிக்க பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.
