மரணித்த இளைஞரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.06) காலை மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து தனது மாட்டிற்கு புல்வெட்டுவதற்கு பட்டிருப்பு பாலத்தினூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடி 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பேரின்பராசா பிரதீபன்(வயது-29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பயணித்த துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரணித்த இளைஞரின் சடலம் மீட்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version