வவுனியா நகரத்தில் ஆணொருர் அடித்து கொலை

-வவுனியா நிருபர்-
வவுனியா நகரம், பஜார் வீதியில் ஆணொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீதியோரத்தில் கடையொன்றின் வாயிலில் இரத்தம் வெளியேறிய நிலையில் சடலம் காணப்பட்டதை அவ்வீதியால் சென்றவர்கள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த நபர் அப்பகுதியில் பொதி சுமக்கும் தொழில் செய்பவர் (நாட்டாமை) என தெரியவரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரத்தில் ஆணொருர் அடித்து கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version