இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாம் நாள் நிறைவு

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி பலமான நிலையினை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இலங்கை அணியின் தலைவர் டிமுத் கருணாரட்ன மற்றும், குஷல் மென்டிஸ் ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டம் இலங்கை அணியினை பலமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

பந்துவீச்சில் அறிமுகத்தை மேற்கொண்ட இடது கர சுழற் பந்துவீச்சாளர், பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

முதல் நாளில், அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்ற நிலையில் நிறைவு செய்தது. தொடர்ந்தும் துடுப்பாடியா அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 110 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றது.

இதில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஷேன் 104 ஓட்டங்களையும் பெற்றனர். இது ஸ்மித்தின் 28 ஆவது சதமாகும். லபுஷேன் வெளிநாட்டில் பெற்ற முதற் சதமாக இது பதிவாகியுள்ளது. பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும், கசூன் ராஜித 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். பிரபாத் ஜயசூரிய அவரின் முதற் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்சில் துடுப்பாடி வரும் இலங்கை அணி 63 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் திமுத் கருணாரட்ண 86 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மிச்செல் ஸ்வெப்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றனார்கள்.

இன்று 10.00 மணிக்கு இரண்டாம் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியா இரண்டாம் நாள் நிறைவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version