பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய திகதியான 13 ஆம் திகதியிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம்*(11.07) கடிதத்தில் கையெழுத்திட்டுளளதாகவும், நாளையதினம் சபாநாயகர் இராஜினாமா கடிதத்தினை வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடிதத்தில் கையெழுத்து வழங்கிவிட்டு நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது. இருப்பினும் அவர் நாட்டை விட்டு செல்லவில்லை எனவும் நாட்டிலேயே இராணுவ பாதுகாப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகல் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version