யொஹானிக்கு அரச கெளரவம் – அமைச்சர் நாமல்

சர்வதேச புகழ் பெற்றுள்ள இலங்கை பாடகி யொஹானி மற்றும் பாடகர் சதீசன் ஆகியோருக்கு இலங்கை அரசாங்கம் சார்பாக கெளரவிப்பு செய்யப்படும் என இளைஞர் விவகார, விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யொஹானியின் இந்த சாதனை மிகப்பெரிய விடயம். யொஹானி திறமையான கடின உழைப்பாளி. இதே போன்று மேலும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு மற்றவர்களையும் வளர்த்து விடவேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொவிட் நிலைமை காரணமாக மக்களை கூட்டி கெளரவிப்பு செய்ய முடியாத நிலையுள்ளது. ஆனாலும் ஏதோ ஒரு வகையில் ஒரு கெளரவிப்பு செய்யப்படும். இன்னமும் நிலைமைகள் சுமூகமானதும் அவருக்கான கெளரவிப்பு செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யொஹானி பாடிய மனிக்கே மஹே ஆதரய பாடல் இதுவரை 12 குடிக்கும் அதிகமானோரால் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டுள்ளது.

யொஹானிக்கு அரச கெளரவம் - அமைச்சர் நாமல்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version