சிங்கப்பூர் செல்ல ஜனாதிபதி கோட்டாவுக்கு அனுமதி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளாதாக நியூஸ் சனல் ஏசியா ஊடகவியலார் மத்திய மோகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அங்கு தஞ்சமடைய கோரவில்லை எனவும், அவ்வாறு எதுவும் சிங்கப்பூர் அரசினால் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக மேலும் அவர் கூறியுள்ளார்.

மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற சவுதி விமானத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, அவரின் மனைவி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செல்ல ஜனாதிபதி கோட்டாவுக்கு அனுமதி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version