முதலாம் திகதி நாடு திறக்கப்படுமென பலரும் எதிர்பார்த்துள்ள நிலையில் நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விசக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையிலிருந்து, இலங்கைக்கு உள்ளூர் தேவைகளுக்காக எரிபொருள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரையில் நாட்டை திறப்பது சந்தேகம் என சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் குழு நிலை கருத்து பகிர்வில் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விசக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
