ஆசிய கிண்ணம் – இந்தியா எதிர் ஹொங் கொங்

-டுபாயிலிருந்து விமல்-

இந்தியா, மற்றும் ஹொங் கொங் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண போட்டி இன்று டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி 7.30 இற்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

ஹொங் கொங் அணி பலமான அணி ஒன்றினை நீண்ட இடைவேளைக்கு பின்னர் சந்திக்கின்றது. தெரிவுகாண் போட்டிகளினூடாக ஆறாவது அணியாக ஆசிய கிண்ண தொடருக்கு தெரிந்தவானது.

இந்தியா அணி இன்று வெற்றி பெற்று முதலிடத்தை குழு நிலையில் பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ஹொங் கொங் அணி எவ்வாறு விளையாடப்போகிறது என்பதனையே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய அணி மாற்றங்களின்றி விளையாடுமென்றே எதிர்பார்க்கலாம். இருந்தாலும் அணி தயார்படுத்தல்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கபப்டுகிறது. குறிப்பாக பந்துவீச்சில் சில மாற்றங்கள் செய்யலாம் என்ற நிலை இந்தியா அணி சார்பாக காணப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version