இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிக்கல்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான டில்ஷான் மதுசங்க உபாதையடைந்துள்ளார். இன்று காலை பயிற்சி வேளையில் இந்த உபாதை ஏற்பட்டுள்ளது. தசை பிடிப்பு காரணமாக அவர் உலக கிண்ண தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுளளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உபாதைக்கான MRI ஸ்கான் செய்வதற்காக டில்ஷான் மதுசங்க வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவரின் வேகமான பந்துவீச்சும், இடத்துகர வேகமும் இலங்கை அணிக்கு பெரியளவில் பலத்தினை வழங்கிய நிலையில் அவர் அணியினை விட்டு வெளியேறினால் இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாக அமையும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version