முதலிடத்தை நோக்கி சென்னை

IPL கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின் குழு நிலையில் முதலிடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற சன்ரைஸ் ஹைட்ராபாட் அணியுடனான போட்டியில் 6 விக்கெட்களினால் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை சென்னை அணி தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய சன்ரைஸ் ஹைட்ராபாட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. இதில் ரிதிமன் சஹா 44(46) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜோஷ் ஹெசல்வூட் 3 (4 – 24)விக்கெட்களையும், டுவைன் பிராவோ 2 (4-17) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இதில் ருத்துராஜ் கெய்க்வூட் 45(38) ஓட்டங்களையும், பாப் டு பிளேஸிஸ் 41(36)ஓட்டங்களையும் பெற்றனர். ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

இன்று (01.10) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி அடுத்த சுற்று தெரிவாகும் வாய்ப்பை முழுமையாக இழக்கும்.

முதலிடத்தை நோக்கி சென்னை
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version