பாடசாலைகள் அருகே நடந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது!

பாடசாலைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 75 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலுள்ள 122 பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பில் 02 கிலோகிராம் 148 கிராம் மாவா வகை போதைப்பொருள், 09 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 போதை வில்லைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த சோதனை நடவடிக்கை தொடரும் என பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version