தோட்ட மக்களிடையே தபால் சேவை பாதிப்பு!

தோட்டமாக்களிடையே தபால் சேவைகள் முறையாக நிகழ்வதில்லை, தபால்கள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மொழியறிந்த கடிதம் வழங்குவோருக்கான பற்றாக்குறை, தோட்டங்களில் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்கள் மூடப்பட்டிருப்பது, தோட்ட வீடுகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கான வீட்டு முகவரிகள் இல்லாதிருப்பது போன்ற காரணங்களால் தோட்டமாக்களிடையே தபால் சேவைகள் முறையாக நிகழ்வதில்லை என மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தபால் திணைக்களம், தபால் அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் நடத்திய விசாரணையின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்வுகள் அடங்கிய முழுமையான அறிக்கை ஜனவரி 6ம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அறிக்கை கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கு பரிந்துரைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version