
உள்ளூராட்சி தேர்தலுக்கு தாயாராகுமாறு தேர்தல்கள் திணைக்களம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளது. புள்ளிவிபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் இறங்குமாறும் மேலும் பணிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களம் 800 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான 340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது.
பெப்ரவரி 18 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்படவுள்ளதாகவும், மார்ச் மாதம் 20 ஆம் திகதி புதிய உள்ளூராட்சி சபைகள் பதவியேற்கவுள்ளதாக தகவலை அடிப்படையாக வைத்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.