நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் அறவிடப்படும் கட்டணம் 10% குறைக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சில் இன்று (04.01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ் கட்டணங்கள் இன்று (04.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
