ஆசிரியர் தினம் இன்று – ஜனாதிபதியின் வாழ்த்து

உலக ஆசிரியர் தினம் இன்று ஒக்டோபர் 05 அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என தனது உலக ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்தில் “இன்று உலக ஆசிரியர் தினம். பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள,பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து ஆசிரியரே செய்கிறார்.

இத்தகைய பெருமைக்குரிய மற்றும் கௌரவமான தொழிலில் ஈடுபட்டுள்ள உங்கள் அனைவருக்கும் இன்று எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அறிவு, ஞானம் மற்றும் ஒழுக்கத்துடன் மேலும் பல குழந்தைகளை உருவாக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினம் இன்று - ஜனாதிபதியின் வாழ்த்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version