நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக நடக்கும் சதிகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், எதற்கும் பின்வாங்கும் ஆள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

”எதற்கும் பின்வாங்கமாட்டேன். எந்த சதிக்கும் அஞ்சமாட்டேன். சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்கிறேன். எத்தகைய பிரச்சனைகள் கொடுத்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்”. என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்!

Social Share

Leave a Reply