உலககிண்ணத்திலிருந்து சாம் கரன் வெளியேற்றம்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலிருத்து இங்கிலாந்து வீரர் சாம் கரன் வெளியேற்றப்பட்டுள்ளார். IPL கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் அணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கீழ் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சாம் கரன் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்தும் விளையாட முடியாத நிலையில் நாடு திரும்புகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் கரனுக்கு பதிலாக அவரின் அண்ணா ரொம் கரன் இங்கிலாந்து உலக கிண்ண அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார். ரீஸ் ரொப்லி மேலதிக வீரராக அணியோடு இணைகிறார்.

ஏற்கனவே இங்கிலாந்தின் சில முக்கிய வீரர்கள் உபாதை காரணமாகவும், வேறு காரணங்களுக்காகவும் விலகியுள்ள நிலையில் சாம் கரனின் வெளியேற்றம் இங்கிலாந்து அணிக்கு பாதிப்பாக அமையவுளள்து

உலககிண்ணத்திலிருந்து சாம் கரன் வெளியேற்றம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version