ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்து வடிவேல் சுரேஷ் விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார்.

பதுளை, மடுல்சீமையில் இன்று (09.02) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னரே அறிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என அறிவித்ததன் பின்னர் அதே சமயத்தில் வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்ததோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடு தமக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பசறை தொகுதியின் பிரதம அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்து வடிவேல் சுரேஷ் விலகல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version