கைதாகிய இராணுவத்தினர் இருவருக்கும் விளக்கமறியல்!

பொரளை பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர் இருவரும் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு(13.02) தெமட்டகொடவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது இராணுவ வீரர் ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து, பொரளை பொலிஸாரினால் குறித்த இராணுவத்தினர் இருவரும் கைது செய்யப்பட்திருந்தனர்.

கைதாகிய இராணுவத்தினர் இருவருக்கும் விளக்கமறியல்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version