மாகாணசபை தேர்தல் காலம் தீர்மானிப்பு – மனோ MP

2022 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்குள் மாகாணசபை தேர்தல் நடைபெறுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தேர்தல் குழுவை அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


முந்தைய விகிதாசார முறைப்படி இந்த தேர்தல் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தேர்தல் முறை தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.

மாகாணசபைகளுக்கான காலம் நிறைவடைந்தது இரண்டு வருடங்களையும் கடந்துள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் தேர்தலை அடுத்த வருடம் நடாத்த இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாணசபை தேர்தல் காலம் தீர்மானிப்பு  - மனோ MP
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version