தற்போது குறைவடைந்துள்ள உர விலையை மேலும் குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் வாரத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களில் தற்போது 10,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடைக்கான விலையையும், 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற BANDY உர மூடைக்கான விலையும் குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் உர விற்பனையாளர்கள் ஒரு மூடை யூரியா உரத்திற்கான விலையை 11,000 ரூபாவாகவும், ஒரு மூடை BANDY உரத்தை 19,000 ரூபாவாகவும் குறைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.