புதுவருட தினத்தில் இரு கொலைகள்

புதுவருட தினமான நேற்று(14.04) இரண்டு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சீதுவை பகுதியில் இருவருக்கிடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தேக நபரான முன்னாள் இராணுவ அதிகாரி துப்பாக்கியினால் மற்றவரை சுட்ட நிலையில் 45 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் சீதுவை, ராஜபக்ஷபுரவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அகுங்கல, மிதரமுள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் 29 வயதான இளைஞன் மீது நடாத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

புதுவருட தினத்தில் இரு கொலைகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version