சில இடங்களில் கடும் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில்இன்று (25.04) மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply