மாகாண போக்கு இன்று முதல் கடுமை

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கபப்ட்ட போதும் மீண்டும் கடுமையாக இது பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்பில் கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை விடுத்துள்ளார்.

இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

மாகாண போக்கு இன்று முதல் கடுமை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version