அரசியல் பிழைப்புக்காக நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சி – அநுர!

அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் அனுராதபுரம் மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலத்தைப் போலவே ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல் இதுபோன்ற மோதலை தூண்டுவதில் முன்னிலை வகித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

75 வருடங்களாக நாட்டை அழித்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து சிங்கள, முஸ்லிம், தமிழ் கீழ்மட்ட மக்களும் ஒன்றிணைந்து நின்றுள்ளனர். அனைத்து சமூகங்களினதும் ஒற்றுமைக்கு அச்சமடைந்த ஆட்சியாளர்கள் தற்போது மீண்டும் அவர்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, தெற்கு என பிரித்துவிட்டு, மீண்டும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரிக்க முயற்சிக்க்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், ஆட்சியாளர்களின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்கள் பலியாகிவிடக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version