கொழும்பின் பல பகுதிகளில் நாளை (24.06) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை (24.06) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.