மலேசியா மற்றும் இலங்கைக்கிடையில் விமான சேவைகளை அதிகரிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
து பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு இணக்கம் தெரிவித்த மலேசிய உயர்ஸ்தானிகர், மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் , மேலும் இரு விமான சேவை நிறுவனங்கள் கோலாலம்பூர் மற்றும் கொழும்புக்கிடையில் விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவுக்கு வருடாந்தம் 70 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும், மேலதிக விமானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களில் சில தரப்பினரை இலங்கைக்கு ஈர்க்க முடியும் எனவும் மலேசிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.