இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க அனுமதி!

இலங்கையில் சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (26.06) ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேமிங் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவைத் தயாரிக்க சட்ட வரைவாளர் அறிவுறுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேசினோ ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதன் மூலம், கேமிங் நிறுவனங்களிடமிருந்து வரிகளை முறையாக வசூலிப்பது, கேமிங் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது, சமூகம் மற்றும் தனிநபர்கள் மீது கேமிங்கின் எதிர்மறையான தாக்கத்தை குறைப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version