வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் சீனா உதவும் என நம்புவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சீனர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், அவர்களுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த வாரம் சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டபோது பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து பாரிஸ் கிளப் கிளப் ஆஃப் கிரெடிட்டர்ஸ் உருவாக்கிய மேடையில் சீனர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கிறார்கள் எனவும் கடன் மறுசீரமைப்பில் சீனா எங்களுக்கு உதவும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் அவர் கூறினார்.