வருடத்தின் இரண்டாம் பாதியில் பொருளாதாரம் மீட்சியடையும் – நந்தலால் வீரசிங்க!

நாட்டின் பொருளாதார  மீட்சியை வருடத்தின் இரண்டாம் பாதியில் காணலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  ”நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் மற்றும் எரிவாயு விலையும் தற்போது குறைந்துள்ளன.

இந்த ஆண்டு முழுவதும் ரூபாய் வலுவடைந்து வருகிறது. பங்குச் சந்தை விலைக் குறியீடு மிகவும் நேர்மறையாக இருப்பதை காணலாம். எனவே ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார மீட்சியைக் காணலாம், அது தொடரும் என்று நாங்கள் நினைக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version