பரிட்சார்த்தமாக வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி புகையிரம்!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (ஜுலை 09) யாழ்தேவி புகையிரம் பரிட்சார்த்தமாக தனது பயணத்தை மேற்கொண்டது. 

இதன்போது யாழ்  தேவி புகையிரதம்  100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணத்திருந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்காரணமாக புகையிர சேவைகள் தடைபட்டிருந்தன.

பரிட்சார்த்தமாக வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது யாழ்தேவி புகையிரம்!

இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்தி செயற்திட்டத்தில், வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும் , வவுனியா ஓமந்தை வரையாயில் 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே இன்று பரிட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் தனது பயணத்தை மேற்கொண்டது.

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து இன்று (07.09) காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதமாக 80 KMPH தொடக்கம் 100 KMPH வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து மீண்டும் ஓமந்தை புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் வரை பயணித்திருந்தது.

குறித்த புகையிரதம் பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி , வவுனியா ஆகிய இரு புகையிரத நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது.

புகையிர பாதை புனரமைப்பு பணிக்காக   கடந்த 6மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட கங்கேசன்துறை – கொழும்பிற்கான புகையிர சேவைகளை இம்மாதம் 15 ஆம் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version