ஒவ்வாமையால் ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த இறப்புகள் குறித்து விசாரணை நடத்தும் பணியும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவம், செவிலியர் மற்றும் ஒவ்வாமை தொடர்பான விரிவான அறிவும் புரிதலும் கொண்ட நிபுணர்கள் ஐவர் அடங்கிய குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் கூறினார்.

இந்தக் குழு அனைத்து சர்ச்சைக்குரிய மரணங்கள் குறித்தும் முழு விசாரணை நடத்தி சுகாதார அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை அமைப்பின் ஊடாக மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்கு இது உதவும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version